இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான சட்ட அமலாக்கம் அரசியல் பழிவாங்கல் அல்ல, மாறாக மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் செயல் என பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் வரை இலஞ்சக் குற்றச்சாட்டில் 34 பேரும், ஊழல் குற்றச்சாட்டில் 29 பேரும் கைதுசெய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கைகள் மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.