உள்நாடு

ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீடிப்பு

(UTV | கொழும்பு) –  நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை எதிர்வரும் 13ம் திகதி அதிகாலை 4 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று நடைபெற்ற தேசிய கொவிட் தடுப்புச் செயலணி கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 20 ஆம்திகதி முதல் 30 ஆம்திகதி வரை அமுலாகும் வகையில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு, பின்னர் தளர்த்தப்படாமல் எதிர்வரும் 6 ஆம் திகதிவரை நீடிக்க கடந்த கொவிட் தடுப்புச் செயலணி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

Related posts

இலங்கை விமான படைக்கு புதிய தளபதி நியமனம்

ரணில் தேர்தலை பிற்போட்டு மக்களின் அடிப்படை உரிமையே மீறி இருக்கிறார் – சஜித்

editor

தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை – திகதியை அறிவித்தார் சபாநாயகர்

editor