அரசியல்உள்நாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – 54 வேட்பாளர்களும், 204 ஆதரவாளர்களும் கைது!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணிநேரத்தில் 8 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (04) காலை 6 மணிமுதல் இன்று (05) காலை 6 மணி வரையான காலப்பகுதியிலேயே மேற்படி வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு, குறித்த காலப்பகுதியில் கட்சிகளின் ஆதரவாளர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கடந்த மார்ச் 3 ஆம் திகதி முதல் இன்று வரை கைது செய்யப்பட்ட மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் 204 கட்சி ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையில், தேர்தல் சட்டங்களை மீறியதற்காக பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்ட மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 46 ஆகும்.

Related posts

மீனவ மக்களுக்கு மண்ணெண்ணெய் தொடர்ந்து வழங்கப்படுவதை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை

‘நிபா’ வைரஸ் குறித்து மக்களுக்கு அறிவுறுத்தல்!

முதல் தொகுதி டீசல் இலங்கைக்கு