அரசியல்உள்நாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பாக வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ள உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான தேர்தலை நடத்துவதை நாளை (02) வரை தொடர்ந்து நிறுத்தி வைக்குமாறு சம்பந்தப்பட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனுக்களை பரிசீலித்த பின்னர், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் மொஹமட் லாஃபர் தாஹிர் மற்றும் கே.பி. பெர்னாண்டோ ஆகிய நீதிபதிகள் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தங்கள் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக, கொழும்பு மாநகர சபை சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உட்பட பல்வேறு உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களால், இந்த மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

Related posts

ஜா-எல, கனுவன சந்தி ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகை

கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதம் இன்று

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜஸ்டின் கலப்பத்தி காலமானார்