உள்நாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டம் இன்று

தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டம் ஒன்று இன்று (27) நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து முடிவு எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

உள்ளூராட்சி அமைச்சினால் சமீபத்தில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, உள்ளூராட்சி மன்றங்கள் எதிர்வரும் ஜூன் மாதம் 2 ஆம் திகதி கூட உள்ளன.

இதற்கமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாத முதல் வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழ்நிலையில் இன்று இடம்பெறவுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டம் தீர்மானமிக்கதாக அமையவுள்ளது.

Related posts

இலங்கையில் – பலஸ்தீனுக்காக கண்கலங்கி பேசியவர்தான் ஈரான் ஜனாதிபதி! (சிறு அறிமுகம்)

புத்தளத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டி – கட்டுப்பணத்தை செலுத்தியது

editor

தற்போதைய அரசாங்கம் மக்கள் ஆணையைப் புறந்தள்ளி ரணில் விக்கிரமசிங்கவின் பாதையில் செல்கிறது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor