உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக 168 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அவற்றில் 36 குற்றவியல் முறைப்பாடுகளும், தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான 132 முறைப்பாடுகளும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தொடர்புடைய முறைப்பாடுகள் தொடர்பாக 79 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் 18 வேட்பாளர்களும் அடங்குவதாக பொலிஸார தெரிவித்தனர்.
இதுவரை 14 வாகனங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.