உள்நாடுபிராந்தியம்

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

கரடியனாறு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கரடியனாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (30) இரவு முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

28 வயதுடைய சந்திவௌி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மூடப்பட்டிருக்கும் பல்கலைக்கழகங்கள் தொடர்பிலான அறிவித்தல்

தேவாலயத்துக்கு சேதம் விளைவித்த சம்பவம் – தேசிய மக்கள் சக்தி முக்கியஸ்தர் உட்பட 8 பேர் கைது!

editor

இன்று மாணவர்களுக்கு ZOO வை பார்வையிட இலவச அனுமதி