கரடியனாறு பொலிஸ் பிரிவின் கோபாவளி பகுதியில், பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, உள்நாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று சனிக்கிழமை (19) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கோபாவலி பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மெலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.