உள்நாடுபிராந்தியம்

உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் மூவர் கைது

பொலன்னறுவையில் அரலகங்வில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கஜுவத்த பகுதியில் 3 உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் மூன்று சந்தேக நபர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (05) காலை அரலகங்வில பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அரலகங்வில பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் அரலகங்வில ருஹுனுகம பகுதியை சேர்ந்த 31, 34 மற்றும் 39 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அரலகங்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

3 மணி நேர ‘நெஞ்சறை’ சத்திர சிகிச்சையில் உயிர் பிழைத்த இளைஞர் – மன்னார் வைத்தியசாலையில் சம்பவம்!

ஜனாதிபதி அநுரவின் அடுத்த வெளிநாட்டு பயணம் தொடர்பில் வெளியான தகவல்

editor

தேங்காய் பிரச்சினைக்கு தீர்வு – இலவச உரம் வழங்க அரசாங்கம் முடிவு – அமைச்சர் சமந்த வித்யாரத்ன

editor