உள்நாடு

“உள்கட்சி அரசியலை நிர்வகிப்பதே ஆளும் கட்சியின் முக்கிய கவனம்”

(UTV | கொழும்பு) – “தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக உள்கட்சி அரசியலை நிர்வகிப்பதே ஆளும் கட்சியின் முக்கிய கவனம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வாக்குறுதியின்படி அமைச்சரவையின் விஞ்ஞான ரீதியான நிர்வாகத்தினால் எரிபொருள் மற்றும் எரிசக்தி பற்றாக்குறை இன்னும் மோசமாகியுள்ளது” என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சியைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர்; இதற்கு முன்னர் கைத்தொழில் அமைச்சராகவும், எரிசக்தி அமைச்சராகவும் பதவி வகித்த விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து மார்ச் 4 ஆம் திகதி நீக்கப்பட்டனர்.

Related posts

பரீட்சைத் திணைக்களத்துக்கு புதிய ஆணையாளர் நியமனம்

பாராளுமன்ற செயலகத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பம்

இன்று முதல் ரூ.700 விலைக் கழிவுடன் சதொசவில் நிவாரண பொதி