சூடான செய்திகள் 1

உலக சுற்றாடல் தின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் 

(UTV|COLOMBO)-நாளை ( 05) அனுஷ்டிக்கப்படவுள்ள உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இன்று முற்பகல் 10.00 மணிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில்  உலக சுற்றாடல் தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.

‘முறையற்ற பிளாஸ்டிக் பாவனையினால் ஏற்படும் சுற்றாடல் தாக்கங்களை தடுப்போம்’ என்ற தொனிப்பொருளில் இம்முறை சுற்றாடல் தின நிகழ்வு கேகாலையில் இடம்பெறவுள்ளது.

கடந்த மே மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 05 ஆம் திகதியான காலப்பகுதி தேசிய சுற்றாடல் வாரமாக அறிமுகப்படுத்தப்பட்டு பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

சர்வதேச சுற்றாடல் தின நிகழ்வு ஜனாதிபதியினால் மரக் கன்றொன்று நடப்பட்டு ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

இன்று இரவு பாராளுமன்றம் கலைக்கப்படலாம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

editor

இந்தாண்டில் ,இலங்கையின் பொருளாதார வளர்ச்சி

பஸ் கட்டணம் குறைக்கப்படுமா?