வகைப்படுத்தப்படாத

உலகில் மாசடைந்த நகரங்கள் பட்டியலில் 14 வது இடத்தில் இந்தியா

(UTV|INDIA)-உலகில் ஆண்டுதோறும் 7 கோடி மக்கள் சுகாதாரமற்ற காற்றை சுவாசிப்பதால் இறக்கின்றனர். 10 ல் 9 பேர் மாசடைந்த காற்றை சுவாசிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘காற்று மாசடைந்த முதல் 20 நகரங்களில் இந்தியாவில் உள்ள 14 நகரங்கள் இடம்பெற்றுள்ளது. அதில் வாரனாசியில் மாசு மிக அதிக அளவில் உள்ளது. இதையடுத்து, டெல்லி, கான்பூர், கவாலியர், பரைதாபாத், கயா, ஆக்ரா, பாட்னா, முசாபர்நகர், ஸ்ரீநகர், குருகான், ஜெய்ப்பூர், பட்டியாலா மற்றும் ஜோத்பூர் நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா கண்டங்களில் உள்ள நாடுகள் மிகவும் மாசடைந்து காணப்படுகின்றன. இப்பகுதிகளில் சல்பேட், நைட்ரேட் மற்றும் கார்பன் போன்ற மாசுக்கள் காற்றில் கலந்து உள்ளன. இதனால் மக்களுக்கு இதய பிரச்சனை, கேன்சர் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன ‘ எனக்குறிப்பிட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

அமெரிக்காவின் யு டியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கி சூடு

Wahlberg leads dog tale “Arthur the King”

சிறுபோகத்திற்கு தேவையான நீர் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் ஊடாக விநியோகம்