உள்நாடு

உரம் கப்பல் மேலும் தாமதமாகிறது

(UTV | கொழும்பு) –  யூரியா உரத்தை ஏற்றிச் செல்லும் கப்பல் ஒன்று இலங்கைக்கு வருவது மேலும் தாமதமாகும் என கொமர்ஷல் உர நிறுவனம் தெரிவித்துள்ளது.

தாமதம் காரணமாக மற்றுமொரு கப்பல் ஜூலை 6ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தக் கப்பல் 40,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை ஓமானில் இருந்து இலங்கைக்கு ஏற்றிச் சென்றுள்ளது.

இந்திய கடன் வசதியின் கீழ் பெறப்பட்ட உரத் தொகுதியொன்று இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக கொமர்ஷல் உர நிறுவனம் தெரிவித்துள்ளது.

உரங்களின் தரம் மூன்று தரப்பினரால் ஆராயப்பட்டு வருவதாகவும் குறித்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவின் சம்பளம் பாதியாக குறைப்பு – அமைச்சரவை அனுமதி – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor

பல பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

editor

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் இருந்து நால்வர் நீக்கம்