உள்நாடு

உயிர்த்த ஞாயிறு வழக்கில் இருந்து ரிஷாத் விடுதலை

(UTV | கொழும்பு) – ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் கோட்டை நீதவான் நீதிமன்றம் தம்மை விடுவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

உண்மை வெல்லும், அது உடனடியாக நடக்காது, கண்டிப்பாக நடக்கும் என திரு.ரிஷாத் பத்யுதீன் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 7 மாதங்கள் அநியாயமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு தன்னையும் ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் குற்றம் சாட்டி ஆட்சிக்கு வந்ததாகவும், முதல் தவணை முடிவதற்குள் நாட்டு மக்கள் அவர்களை விரட்டியடித்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

வெள்ளவத்தை பகுதி முடக்கப்பட்டதா – நடந்தவை ஒரு கண்ணோட்டம் [VIDEO]

தனது அரசியல் அலுவலகத்தை ஜனாதிபதி இன்று திறந்து வைத்தார்

குடிநீர் போத்தல் வியாபார வர்த்தகர்களுக்கு சிவப்பு சமிஞ்ஞை