உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

கத்தோலிக்க தோவாலயங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் அதிக அவதானம் செலுத்தப்படும் என, இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு பகுதியிலும் பாதுகாப்பு நிலைமை குறித்து பகுப்பாய்வு செய்யுமாறு இராணுவத் தலைமையகம் அந்தப்பகுதிக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், பொலிஸார் மேற்கொள்ளும் முக்கிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்குமாறு அந்தப் பகுதிக்கு பொறுப்பான இராணு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அடையாளம் காணப்பட்ட சிறப்புப் பகுதிகளுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கவும் இராணுவத் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

மழையுடனான வானிலையில் அதிகரிப்பு !

அடுத்து ஆட்சி அமைக்கும் எந்தவொரு அரசாங்கத்திலும், அமைச்சராக இருப்போம்: மனோ

கண்டிய திருமணச் சட்டத்தை இரத்து செய்யும் சட்டமூலம் விரைவில்