உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விவாதத்தில் இன்று (09) நாடாளுமன்றத்தில் பங்கேற்ற பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால பல தகவல்களை வெளியிட்டார்.
தற்போது தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், 2019 ஆம் ஆண்டு மட்டக்களப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே அறிந்திருந்ததாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
வீடியோ