உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : சட்டமா அதிபரின் கோரிக்கை

(UTV | கொழும்பு) –  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை தயாரிப்பதற்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இதுவரை பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களின் அறிக்கையை பெற்றுத்தருமாறு சட்டமா அதிபர் கோரியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவருக்கு அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

Related posts

புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டது

தப்பிச் சென்றுள்ள 129 பேரை கைது சிவப்பு அறிவித்தல்

விபத்தில் சிக்கி உயிரிழந்த சருகுப் புலி குட்டி