சூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 64 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

(UTV|COLOMBO) – கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் தொடர்பில் காத்தான்குடியில் கைது செய்யப்பட்ட 64 பேரும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதவான் ஏ.சி, ரிஸ்வான் முன்னிலையில் சந்தேகநபர்கள் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியாவில், தேசிய தௌபீக் ஜமாத் அமைப்பினூடாக ஆயுதப் பயிற்சி பெற்றமை தொடர்பில் காத்தான்குடியில் கைது செய்யப்பட்டவர்களின் விளக்கமறியலே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

மத்திய வங்கி மோசடி குறித்து வௌியான மேலும் பல தகவல்கள்

சூடுபிடித்துள்ள அரசியல் களம் – கொழும்பு மாநகர மேயர் பதவிக்கு கடும் போட்டி!

editor

ஐந்தாம் தர புலமைப் பரிசில் கொடுப்பனவு அதிகரிப்பு