சூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம்

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட மூவரடங்கிய விசாரணை குழுவின் இறுதி அறிக்கை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உயர் நீதிமன்ற நீதிபதி விஜித மலல்கொடவினால் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இன்றைய தினம் குறித்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.

விசாரணை குழுவின் ஏனைய உறுப்பினர்களான முன்னாள் அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன மற்றும் முன்னாள் காவல்துறைமா அதிபர் என்.கே.இலங்ககோணும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

இதற்கு முன்னர் விசாரணை குழுவின் இரண்டு இடைக்கால அறிக்கைகள், ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

நேவி சம்பத் எதிர்வரும் மாதம் 05ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில்

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் பலி [UPDATE]

டுபாயில் கைதான பாடகர் அமல் பெரேரா உள்ளிட்ட 31 பேர்- இன்றைய தீர்மானம்?