சூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்கள்களை கண்டறியும் தெரிவுக்குழுவுக்கு 8 பேர் நியமனம்

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் கண்டறிந்து, பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட தெரிவுக் குழுவுக்கு, சபாநாயகர் கரு ஜயசூரியவால், 8 பேரடங்கிய குழுவினர், இன்று(23) நியமிக்கப்பட்டது.

மேற்படி குறித்த இந்தக் குழுவில் ,பிரதிச் சபாநாயகர் ஆனந்த குமாரசிங்க தலைமையிலான , பாராளுமன்ற உறுப்பினர்களான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ரவூப் ஹக்கம், ரவி கருணாநாயக்க, ஜயம்பதி விக்கிரமரத்ன, காவிந்த ஜயவர்தன, ஆசு மாரசிங்க, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

Related posts

இலங்கையுடனான உறவு எமக்கு முக்கியம் – டிரம்ப்

புலமைப் பரிசில் பரீட்சை கட்டாயம் இல்லை

மலேசியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் திலக் மாரப்பன