கிசு கிசு

உயர் தரப் பரீட்சை தொடர்பிலான அறிவிப்பு

(UTV | கொழும்பு) – சமூகத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர் காரணமாக நாட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், க.பொ.த உயர் தரப் பரீட்சைத் திகதியை மீண்டும் மாற்றுவதற்கு இதுவரையில் எவ்வித யோசனையும் முன்னெடுக்கப்படவில்லை என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் பரீட்சை ஒத்திவைப்பு தொடர்பிலான போலியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 12ம் திகதி முதல் நவம்பர் 6ம் திகதி வரை க.பொ.த உயர் தரப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற பொலிஸ் ‘ரோபோ’

ரூ.123 கோடி செலவில் தயாரான தங்கம் மற்றும் வைரக்கற்களாலான ஷுக்கள் …

பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சும் மாம்பழங்களை அனுப்பும் அறிக்கையும்