உள்நாடு

உயரும் வெப்பச்சுட்டெண் – பொது மக்களுக்கு எச்சரிக்கை

(UTV | கொழும்பு) –  உயரும் வெப்பச்சுட்டெண் – பொது மக்களுக்கு எச்சரிக்கை

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வெப்பச் சுட்டெண் அறிவித்தலை, வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது

வெப்பம் அதிகரித்து வருவதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அறிவித்தலின் அடிப்படையில், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் வெப்பச் சுட்டெண் – மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை – ‘எச்சரிக்கை’ மட்டத்திற்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே பொதுமக்கள், முடிந்தவரை அடிக்கடி நிழலில் ஓய்வெடுக்கவும், கடுமையான வெளிப்புற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், இலகுரக மற்றும் வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்று எரிபொருள் விலை திருத்தம் ?

editor

பதில் பிரதம நீதியரசராக புவனேக அலுவிஹாரே

க்ளைபோசைட் தடையை நீடிக்கும் வர்த்தமானி அரச அச்சகத்துக்கு