உலகம்

நிவாரண பொருட்களுடன் காசா நோக்கி சென்ற படகு தடுத்து நிறுத்தம் – கிரெட்டா தன்பெர்க் குழுவை கைது செய்த இஸ்ரேல்

ஜெருசலேம், இஸ்ரேல், ஹமாஸ் இடையே ஓராண்டுக்குமேல் போர் நீடித்து வருகிறது.

இந்த போரில் காசாவில் 54 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் காசாவுக்கு இஸ்ரேல் வழியாக நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, சுவீடனை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க். இவர் பிரீடம் புளோட்டிலா மேட்லீன் என்ற பாலஸ்தீன ஆதரவு தொண்டு நிறுவனத்துடன் கைகோர்த்து காசாவுக்கு கப்பலில் நிவாரண பொருட்களை கொண்டு செல்வதாக அறிவித்தார்.

அதன்படி, அந்த கப்பலில் கிரெட்டா தன்பெர்க், பிரான்ஸ் எம்.பி. ரிமா ஹசன் உள்பட 12 பேர் பயணித்தனர்.

இத்தாலியின் சிஸ்லி தீவில் இருந்து காசா நோக்கி புறப்பட்ட அந்த கப்பல் இன்று (09) அதிகாலை இஸ்ரேல் கடற்பகுதி அருகே சென்றபோது இஸ்ரேல் அதிரடிப்படையினர் அதை இடைமறித்தனர்.

கப்பலுக்குள் நுழைந்த இஸ்ரேல் படையினர் அதில் இருந்த கிரெட்டா தன்பெர்க் உள்பட 12 பேரையும் கைது செய்தனர்.

விளம்பரத்திற்காக கிரெட்டா தன்பெர்க் உள்பட 12 பேரும் இந்த செயலில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டியை இஸ்ரேல் வெளியுறவுத்துறை, கைது செய்யப்பட்ட 12 பேரும் இஸ்ரேல் அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்து அவரவர் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளது.

Related posts

சிக்கியது கொள்கலன் கப்பல் : ஒவ்வொரு மணி நேரமும் சுமார் 40 கோடி அமெரிக்க டாலர் நட்டம்

துருக்கியில் ஹோட்டலில் பாரிய தீ விபத்து – பத்திற்கும் மேற்பட்டவர்கள் பலி

editor

கன்னி பயணத்தை ஆரம்பிக்கும் உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்!