உள்நாடு

உடன் அமுலாகும் வகையில் வியட்நாமில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு தடை

(UTV | கொழும்பு) – கடந்த 14 நாட்களுள் வியட்நாமுக்கு சென்ற அனைத்து விமான பயணிகளுக்கும் இலங்கையில் தரையிறங்க அனுமதியளிக்கப்படமாட்டாது என சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்திய மற்றும் பிரித்தானிய கொரோனா வைரஸ்களின் கலப்பு வைரஸ் ஒன்று, கடந்த தினம் வியட்நாமில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உடன்அமுலாகும் வகையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கடந்த 14 நாட்களுக்குள் வியட்நாம் சென்ற பயணிகள் மற்றும் இடைத்தங்கல் (Transit) பயணிகள் எவருக்கும் இவ்வாறு தரையிறங்க அனுமதியளிக்கப்படமாட்டாது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

3 மணி நேர ‘நெஞ்சறை’ சத்திர சிகிச்சையில் உயிர் பிழைத்த இளைஞர் – மன்னார் வைத்தியசாலையில் சம்பவம்!

வயது 12, மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் திகதி அறிவிப்பு

இந்தியா பயணிகளுக்கு இலங்கையில் கால்வைக்கத் தடை