உலகம்

உடனடியாக அனைவரும் வெளியேற வேண்டும் – இஸ்ரேல் இராணுவம் எச்சரிக்கை

காஸாவின் மிகப் பெரிய நகரான காஸா சிட்டியில், வைத்தியசாலைகள் தவிா்த்து நிவாரண மையங்கள் உள்ளிட்ட மற்ற எந்தப் பகுதிக்கும் தங்கள் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு கிடையாது என்று இஸ்ரேல் இராணுவம் எச்சரித்துள்ளது.

இது குறித்து நிவாரண அமைப்புகளிடம் இராணுவம் கூறியுள்ளதாவது:

காஸா சிட்டியில் வைத்தியசாலைகள் மட்டுமே பாதுகாக்கப்பட்ட இடங்களாகக் கருதப்படும்.

எனவே, மற்ற அனைத்து நிவாரண உட்கட்டமைப்புகளும் தாக்குதலுக்கு உள்ளாகலாம்.

எனவே, அங்கிருந்து அனைவரும் உடனடியாக வெளியேறவேண்டும் என்று இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது.

ஏற்கெனவே, பொதுமக்கள் அனைவரும் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டும் என்று எச்சரித்துள்ள இஸ்ரேல் இராணுவம், தற்போது நிவாரண கட்டமைப்புகள் மீதும் தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரித்துள்ளது.

இதேவேளை காஸாசிட்டியில் வசித்து வந்த சுமாா் பத்து இலட்சம் பேரில் கணிசமான எண்ணிக்கையிலானவா்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டனா்.

ஆனால், உடல் மற்றும் பொருளாதார பிரச்னை காரணமாக அங்கிருந்து வெளியேற முடியாதவா்களுக்கு இஸ்ரேல் இராணுவத்தின் முன்னேற்றம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Related posts

பாகிஸ்தான் விமான விபத்தில் 97 பேர் பலி

உலகில் மூன்றாவது பெரிய வைரம்

முகக்கவசம் அணியாத பிரேசில் ஜனாதிபதிக்கு அபராதம்