வகைப்படுத்தப்படாத

உக்ரைன் ஜனாதிபதியின் இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல்

(UDHAYAM, COLOMBO) – உக்ரைன் ஜனாதிபதி பெட்ரோ பொரெசென்கோவின் உத்தியோக பூர்வ இணையத்தளம் சைபர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

ரஸ்யாவைச் சேர்ந்த குழுவினராலே இந்த சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

உக்ரைனில் பிரசித்தமான ரஸ்ய இணையத்தளங்கள் சிலவற்றை தடை செய்ய உக்ரைன் ஜனாதிபதி கடந்த தினம் தீமானித்தார்.

அதற்கு பழிதீர்க்கும் வகையிலேயே இந்த சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் இந்த சைபர் தாக்குதலை ரஸ்யா மேற்கொண்டது என்பதற்கான எந்த சான்றும் இதுவரையில் இல்லை என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

மஸ்கெலியாவிலிருந்து கதிர்காமத்திற்கு பக்தர்கள் பாத யாத்திரை

ජපන් ශ්‍රී ලංකා මිත්‍රත්ව පදනමෙන් පරිත්‍යාග කල ගිනි නිවන රථ දෙකක් භාරදෙයි

මස් පිණිස ගවයින් රැගෙන යමින් සිටි සැකකරුවන් 5ක් අත්අඩංගුවට