உள்நாடு

உக்ரைனில் உள்ள இலங்கையர்களின் நிலை அறிய

(UTV | கொழும்பு) – உக்ரைனில் உள்ள இலங்கையர்களை பாதுகாப்பாக மீண்டும் நாட்டுக்கு அழைத்து வர துருக்கியின் அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகம் ஒருங்கிணைந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான முழுமையான தகவல்களுக்கு 24 மணிநேரமும் செயற்படக்கூடிய தொலைபேசி இலக்கங்களும் தரப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

+90-534-456-9498,
+90-312-427-1032

இதேவேளை, உக்ரைனில் வசிக்கும் 14 மாணவர்கள் உட்பட நாற்பதுக்கும் மேற்பட்ட இலங்கைப் பிரஜைகளின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்யும் நோக்கில் துருக்கியின் அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகம் நெருங்கிய தொடர்பில் உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

ஐ.நா பொதுச் செயலாளரின் அறிக்கைக்கு இலங்கை பதில்

கிழக்கு சமூக சேவை சபையினால் மாணவர்கள், கல்வியலாளர்கள் கெளரவிப்பு : பிரதம அதிதியாக ஹரீஸ் எம்.பி

அனர்த்த மரணங்கள் 465 ஆக உயர்வு – 366 பேரை காணவில்லை

editor