உள்நாடு

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை : சட்டமா அதிபரிடமிருந்து 130 பக்க அறிக்கை

(UTV | கொழும்பு) – சஹ்ரானின் பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முக்கியமான சந்தேகநபர்கள் 42 பேருக்கு எதிரான சாட்சியங்களை எழுத்துமூலமாக உறுதிப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார். இது தொடர்பில் 130 பக்கங்களைக்கொண்ட அறிக்கையொன்றை பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பியுள்ளதாக சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் தாக்குதலுடன் தொடர்புடைய, 5 பேர் தொடர்பான விசாரணைகள் முழுமை பெறவில்லை எனவும், இதற்கான விசாரணைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிந்து உறுதிப்படுத்துமாறும் பொலிஸ் மா அதிபருக்கு, சட்ட மா அதிபர் மேலும் அறிவித்துள்ளார்.

Related posts

சம்பிக்கவின் வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்

கண்டியில் சிறியளவிலான நிலஅதிர்வு

சுஜீவ எம்.பிக்கு 250 மில்லியன் ரூபாய் இழப்பீட்டை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு

editor