உள்நாடு

ஈஸ்டர் தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை கையளிப்பு

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் அதற்கான ஆதாரங்கள் உட்பட அனைத்து தொகுதிகளும் பாராளுமன்றத்தில் கையளிக்கப்பட்டன.

88 தொகுதிகளைக் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை இன்று (22) காலை பாராளுமன்ற பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்த ரோஹணதீரவினால் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பெறுபேறுகள் மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களின் மேலதிக பரிசீலனைக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் இது தொடர்பான கோப்புகள் பாராளுமன்றத்தில் கையளிக்கப்பட்டன.

Related posts

அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட கைத்தொழில்களுக்கு 2 இலட்சம் ரூபா கொடுப்பனவு!

editor

இதுவரை 740 கடற்படையினர் குணமடைந்தனர்

கொழும்பில் வழுக்குக்கும் ‘டெல்டா’