கிழக்கு ஈராக்கின் அல்-குட் நகரில் உள்ள வணிக வளாகமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 50 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்த மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை, ஆனால் விசாரணையின் ஆரம்ப முடிவுகள் 48 மணி நேரத்திற்குள் அறிவிக்கப்படும் என்று அம் மாகாணத்தின் ஆளுநர் கூறியுள்ளார்.