உள்நாடு

இ.போ.ச சொந்தமான அனைத்து பேருந்துகளையும் இயக்க நடவடிக்கை

(UTV | கொழும்பு) – இன்று மற்றும் நாளைய தினங்களில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அனைத்து பேருந்துகளையும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, அனைத்து பேருந்துகளையும் இயக்குமாறு இலங்கை போக்குவரத்து சபை தனது ஊழியர்களுக்கு அறிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வார இறுதி நாட்களில் பயணிகள் ரயில் சேவைகள் இடம்பெறமாட்டாது என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

வார இறுதியில் அதாவது, இன்று (21) மற்றும் நாளை (22) ஆகிய இரு தினங்களிலும் எந்தவொரு பயணிகள் ரயிலும் சேவையில் ஈடுப்படமாட்டது என்று ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் நேற்று (20) ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டிருந்தார்.

எவ்வாறாயினும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் பயணிளை ஏற்றி இறக்குவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட முயற்சிக்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

 

Related posts

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசி சந்தைக்கு விநியோகம்

editor

நீரில் மூழ்கி உழவு இயந்திரம் விபத்து – காணாமல் போன மாணவனின் சடலம் மீட்பு

editor

தபால் நிலையங்களை மீண்டும் சனிக்கிழமைகளில் திறக்க தீர்மானம்