வகைப்படுத்தப்படாத

இஸ்ரேல் -பலஸ்தீன மோதலில் 8 பேர் உயிரிழப்பு

காஸா எல்லையில் இஸ்ரேலிய படைகளுக்கும் பலஸ்தீன ஆயுதக்குழுக்களுக்கும் இடையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை இரவு முதல் இதுவரை பலஸ்தீன ஆயுதக் குழுக்களால், இஸ்ரேலை நோக்கி 460க்கும் அதிக ரொக்கெட் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்குப்பதிலாக, பலஸ்தீனின் 160 இராணுவ நிலைகள் மீது, இஸ்ரேல் விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல்களில் 7 பலஸ்தீன ஆயுததாரிகளும் ஒரு சிவிலியனும் கொல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இருதரப்பினருக்கும் இடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்காக எகிப்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்ததாக பலஸ்தீன ஆயுதக்குழுக்கள் தெரிவித்துள்ளன.

 

 

 

Related posts

குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை நிறுத்த சில வழிகள்

110 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் 3 வயது குழந்தை தவறி விழுந்தது – மீட்பு பணி தீவிரம்

நியூசிலாந்து துப்பாக்கிச் சூட்டின் உயிரிழப்பு எண்ணிக்கை 49 ஆக அதிகரிப்பு