உள்நாடுசூடான செய்திகள் 1

BREAKING NEWS – ருஸ்தி பிணையில் விடுதலை

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்ட ருஸ்தி சற்றுமுன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் கடந்த மாதம் 22 ஆம் திகதி வணிக வர்த்தக வளாகத்தில் கைது செய்யப்பட ருஸ்தி பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அத்தனகல்ல நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை (07) ஆஜர்படுத்திய நிலையில், அவரை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

இப்போது அவர் வீடு திரும்பியுள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு மாத இறுதியிலும் அவர் பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் அவர் விடுதலை செய்யப்பட்டதாக அறியமுடிந்தது.

Related posts

போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 19 பேருக்கு மரண தண்டனை விதிக்க அமைச்சரவை அங்கீகாரம்

பேரூந்து விபத்து தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பம்

மருத்துவ அலட்சியம் : கம்பஹா வைத்தியசாலையில் பிறந்த குழந்தை ஊனமுற்றது