உள்நாடுவணிகம்

 இளநீர் விலை அதிகரிப்பு – மக்கள் விசனம்

(UTV | கொழும்பு) –  இளநீர் விலை அதிகரிப்பு – மக்கள் விசனம்

இளநீர் விலை நம்ப முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் அதிகரித்து வரும் கடும் வெப்பநிலை காரணமாக, தாகத்தை தீர்ப்பதற்கு மக்கள் பல்வேறு வகையான பானங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது மக்கள் இளநீரை தேடி செல்லும் நிலையில், அதன் விலை நம்ப முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த காலங்களில் 80 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை விற்கப்பட்ட இளநீர் விலை தற்போது 200 ரூபாவை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ஒரு இளநீர் வெளிநாட்டவருக்கு 300 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஒத்திவைக்கப்பட்ட கிரிக்கெட் வழக்கு!

யாழ்ப்பாணத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு பிராந்திய அலுவலகத்தை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி

editor

அமெரிக்க அலுவலக பிரதானியாக இலங்கை பிரஜை நியமனம்