உள்நாடு

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொதுச் சுகாதார பரிசோதகருக்கு விளக்கமறியல்

ஹோட்டல் ஒன்றின் உரிமப்பத்திரத்தை மீள புதுப்பிப்பதற்காக இரண்டு இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட பொதுச் சுகாதார பரிசோதகரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தம்புள்ளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கலேவெல சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் கடமையாற்றும் பொதுச் சுகாதார பரிசோதகரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பொதுச் சுகாதார பரிசோதகர், இப்பாகமுவ பிரதேசத்தில் உள்ள நபரொருவருக்குச் சொந்தமான ஹோட்டல் ஒன்றின் உரிமப்பத்திரத்தை மீள புதுப்பிப்பதற்காக இரண்டு இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் நேற்று வெள்ளிக்கிழமை (14) கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முட்டை விலையை குறைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் இறக்குமதி

ஷானி அபேசேகர மீண்டும் விளக்கமறியலில்

ஜனாதிபதி அநுர அரசாங்கம் சறுக்குவதற்கு ஆரம்பித்துள்ளது – சுமந்திரன்

editor