உள்நாடு

இலஞ்சம் பெற்ற கிராம சேவக உத்தியோகத்தர் ஒருவர் கைது

(UTV|கொழும்பு) – இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் வணாத்தமுல்லை கிராம சேவை உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வதிவிட சான்றிதழை வழங்குவதற்காக நபரொருவரிடமிருந்து ஒரு இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டிலே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்சம் பெறும் நடவடிக்கையில் தரகராக செயற்பட்ட முச்சக்கரவண்டி சாரதியொருவரும் இதன்போது கைது செய்யப்பட்டதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக் குழுவின் விசாரணை பிரிவு பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பத்மினி வீரசூரிய தெரிவித்துள்ளார்.

Related posts

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு: அரசு EPF நிதியில் கைவைக்கின்றதா?

அறிவுக்களஞ்சியப் புகழ் மர்ஹூம் ஏ.ஆர்.எம். ஜிப்ரியின் 05 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

editor

பெண்கள் வலுவூட்டல் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

editor