விளையாட்டு

இலங்கை வீரர்களுக்கு இந்தியா செல்ல அனுமதி

(UTV|COLOMBO)-இந்தியாவுக்கு செல்ல முற்பட்ட நிலையில் விமான நிலையத்தில் வைத்து திருப்பி அழைக்கப்பட்ட இலங்கை அணியின் ஒருநாள் கிரிக்கெட் வீரர்கள் ஒன்பது பேருக்கும் இந்திய செல்ல மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அவர்கள் 09 பேருக்கும் மீண்டும் இந்தியா செல்வதற்கான அனுமதியை விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேக வழங்கியுள்ளார்.

நேற்று அதிகாலையில் இந்தியாவுக்கு செல்ல முற்பட்ட இலங்கை அணியின் ஒருநாள் கிரிக்கெட் வீரர்கள் ஒன்பது பேர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து திருப்பி அழைக்கப்பட்டிருந்தனர்.

விளையாட்டுத் துறை அமைச்சின் அனுமதியின்றியே இவர்கள் நேற்று  காலை இந்தியாவுக்கு செல்ல முற்பட்டிருந்தனர்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

இலங்கையின் சுதந்திர கிண்ணம் இந்தியா அணிக்கு

தேசிய கடற்கரை கபடி போட்டியில் ஊவா, வடமத்திய அணிகள் வெற்றி

குசல் மெண்டிஸும் சதம் அடித்தார்