சூடான செய்திகள் 1விளையாட்டு

இலங்கை வீரர்களிடம் பாக். அணி தலைவரின் தாழ்மையான வேண்டுகோள்

(UTV NEWS) பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தலைவர் சப்ராஸ் அஹமட் இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்களை தம்நாட்டிற்கு வந்து விளையாடுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்று பாகிஸ்தான் கரச்சி நகரில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த சப்ராஸ் அஹமட் நான் இலங்கை அணி வீரர்களிடம் பாகிஸ்தானுக்கு வரமாறு அழைப்பு விடுகிறேன் மேலும் எமது நாட்டின் பாதுகாப்பு சிறப்பான நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தீர்மானிக்கப்பட்ட கால அட்டவணையின் படி போட்டிகள் நடைபெறும் என தாம் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு லசித் மாலிங்க, ஏஞ்சலோ மெத்தியூஸ் உள்ளிட்ட இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்கள் 10 பேர் பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று…

புத்தகங்களை அச்சிடும் பணிகளை 27 நிறுவனங்களிடம் ஒப்படைக்க தீர்மானம்

சாய்ந்தமருது குர்ஆன் மதரஸாவிலிருந்து சிறுவனின் சடலம் மீட்பு : நிர்வாகி கைது- பதற்ற நிலை