உள்நாடு

இலங்கை வரும் சீன தடுப்பூசி சீனர்களுக்கே

(UTV | கொழும்பு) – சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள சினோபாம் கொரோனா வைரஸ் தடுப்பூசியை, இலங்கையில் உள்ள சீன பிரஜைகளுக்கு செலுத்துவதற்கே அனுமதி வழங்கப்பட்டதாக தேசிய ஒளடத ஒழுங்குமுறை அதிகார சபை தெரிவித்துள்ளது.

எனினும், இலங்கை மக்களுக்கு குறித்த தடுப்பூசியை செலுத்துவது தொடர்பில், இதுவரையில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என அந்த அதிகார சபையின் தலைவரான மருத்துவ நிபுணர் கமல் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

அது குறித்து, விசேட குழுவொன்று ஆராய்ந்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண அரசாங்கத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க தயார் – ராஜித்த சேனாரத்ன

editor

மின் கட்டண பட்டியலில் அதி கூடிய தொகை தொடர்பில் அவதானம்

அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூ உள்ளிட்ட தூதுக் குழுவினர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்தனர்

editor