உள்நாடு

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

182,500 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) அறிவித்துள்ளது.

இந்த ஏல விற்பனை எதிர்வரும் ஜனவரி 29ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அதன்படி, 91 நாட்களில் முதிர்வடையும் 42,500 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்களில் முதிர்வடையும் 60,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளன.

மேலும், 364 நாட்களில் முதிர்வடையும் 80,000 மில்லியன் ரூபா திறைசேரி உண்டியல்களும் உண்டியல்களும் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Related posts

ராணியின் இறுதிச் சடங்கில் இலங்கை ஜனாதிபதியும் கலந்து கொள்வார்

இனவாதம் இல்லாத சுபிட்சமான வாழ்க்கையை உருவாக்கும் பொறுப்பை நாம் ஏற்போம் – சஜித்

editor

சட்டவிரோத துப்பாக்கியுடன் ஒருவர் கைது