உள்நாடு

இலங்கை மத்திய வங்கியின் அதிரடி அறிவிப்பு

பேர்பச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட்டின் வியாபாரத்தின் இடைநிறுத்தமானது மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இதனை அறிவித்துள்ளது.

அதற்கமைய, இலங்கை மத்திய வங்கியானது, பதிவுசெய்யப்பட்ட பங்குத்தொகுதி மற்றும் பிணையங்கள் கட்டளைச்சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளின் நியதிகளின் பிரகாரம் இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.

அந்த வகையில், இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் புலனாய்வுகளைத் தொடரும் விதத்தில், 2026 ஜனவரி 05ஆம் திகதி பி.ப. 4.30 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பேர்பச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் (PTL) அதன் வியாபாரத்தினைக் கொண்டுநடாத்துவதிலிருந்தும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்துமான இடைநிறுத்தத்தினை மேலும் ஆறு மாத காலப்பகுதிக்கு நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளது.

Related posts

கிரிக்கெட் இடைக்கால குழு விவகாரம் – நாளையும் பரிசீலனை

தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் – தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் பிரதிநிதிகள் சந்திப்பு.

ரயில் பாதையில் பயணித்த தம்பதி பலி

editor