அரசியல்உள்நாடு

இலங்கை சோதனை முனையில் நிற்கிறது – சஜித் பிரேமதாச

Teen Business Summit 2025 வணிக மாநாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்கள் ஆற்றிய உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு
அன்புடைய மாணவர்களே, கல்வியாளர்களே, புத்தாக்குநர்களே, அமைப்பாளர்களே, நண்பர்களே.

உயர்தர பாடசாலை மாணவர்களுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட தெற்காசியாவின் முதல் தேசிய அளவிலான வணிக மாநாடாகிய Teen Business Summit 2025 இன் பிரதான விருந்தினராக இன்று உங்கள் முன்னிலையில் பேசும் வாய்ப்பைப் பெற்றிருப்பது எனக்கு கிடைத்த பெரும் கௌரவமாக கருதுகிறேன்.

இந்த புரட்சிகர கூட்டத்திற்கு தலைமை தாங்கிய Business School மற்றும் StartX நிறுவனத்திற்கு எனது இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொண்டு ஆரம்பிக்கிறேன்.

ஒவ்வொரு மாகாணத்திலிருந்தும் வந்து ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் இன்று இங்கு ஒன்றுகூடியுள்ள ஆயிரத்திற்கு மேற்பட்ட பிரகாசமான அபிலாஷை கொண்ட இளம் மனங்களாகிய நீங்கள் அனைவரும் இலங்கையின் இதயத்தையும் அதன் எதிர்காலத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள். இன்று இந்த இடத்தில் உங்களது பங்களிப்பு மிகவும் சக்திவாய்ந்த கதையை சொல்கிறது.

இதன்மூலம் வெளிப்படுவது நம் நாட்டின் இளைஞர்கள் இனிமேலும் பக்கத்தில் நின்று பார்த்துக்கொண்டு, வெறும் பார்வையாளர்களாக தங்கியிருக்கவில்லை என்பதுதான். நீங்கள் முன்னால் வந்து, தலைமை தாங்கி நம் அனைவரின் எதிர்காலத்தையும் மீண்டும் எழுதத் தயாராக இருக்கிறீர்கள்.

நம் நாட்டின் இளைய தலைமுறையிடம் உண்மையுடன் இருக்க வேண்டும் என்பதால், வெறும் கொண்டாட்டத்திற்கு அப்பால் உண்மையான நேர்மையுடன் என் உரையை தொடங்குகிறேன்.

தற்போதைய இலங்கை ஒரு திருப்பு முனையில் அல்ல, மாறாக ஒரு சோதனை முனையில் நிற்கிறது.

உலக வங்கி நமது பொருளாதார வளர்ச்சி பின்னணியை இந்த ஆண்டிற்கு 3.5% ஆகவும் அடுத்த ஆண்டிற்கு வெறும் 3.1% ஆகவும் திருத்தியுள்ளது. இது இயல்பான நிலைக்கு திரும்புவது அல்ல. இது ஒரே இடத்தில் தேங்கிநிற்பதாகும். இவை நன்மைக்காக காட்டப்படக்கூடிய இலக்கங்கள் அல்ல, மாறாக சிவப்புக் கொடிகள், அனர்த்த எச்சரிக்கை சிக்னல்களாகக் குறிப்பிடலாம்.

உண்மையில், பணவீக்கம் நிலையாகியுள்ளது, தெருக்களில் அமைதியும் காணப்படுகிறது. ஆனால் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் இல்லாமல் ஏற்படும் பொருளாதார அமைதி என்பது புயலுக்கு முன் ஏற்படும் அமைதியைப் போன்றது.

அடிப்படை நிலையில் நமது தேசம் இன்னும் பெரும் கடன், பலவீனமான வங்கித் துறை, வீங்கிப்போன அரசு மற்றும் பெரும்பாலும் தேசிய நலனுக்கு மேலாக அரசியல் உயிர்வாழ்வை மதிக்கும் முறைகளில் கட்டப்பட்டுள்ளது.

2028 இல் நிவாரண காலம் முடிவடைகிறது. அந்த ஆண்டில், நாம் கடனை திருப்பிச் செலுத்த ஆரம்பிக்க வேண்டியிருக்கும்போது, நிதி ரீதியாக தற்போது நிலவும் மூச்சுவிடும் வாய்ப்பும் ஆவியாகி மறைந்துவிடும்.
இந்த நேரத்தில் நாம் ஆழமான மாற்றங்களை செய்யாது இருந்தால், மீண்டும், ஒருவேளை மிகவும் மோசமான நிலையில், இரண்டாவது வீழ்ச்சியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

இது நமக்கு முன்பே எச்சரிக்கை அளிக்கப்பட்ட விடயமாகும். 2009 இல் போர் முடிந்த பிறகு நமக்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டது. மீண்டும் 2015 இலும் நமக்கு எச்சரிக்கைகள் கிடைத்தன ஆனால் நாம் அந்த எச்சரிக்கைகளை புறக்கணித்தோம்.

2025 ஆம் ஆண்டையும் அந்த பட்டியலில் சேர்க்காமல் இம்முறை நாம் செவிமடுப்போம்; செயல்படுவோம். இந்த நாட்டிற்கு தேவையானது இன்னும் பூச்சு, கட்டு சுற்றுதல் அல்ல, மாறாக அறுவை சிகிச்சையாகும்.

இந்த வகையான தேசிய மாற்றத்துடன் தொடர்புடைய அடிப்படை மாற்றம் பழைய சக்தி கட்டமைப்புகளிலிருந்து எதிர்பார்க்க முடியாது.

அது வர வேண்டியது புதிய தலைமுறையிலிருந்து, அதாவது உங்கள் தலைமுறையிலிருந்து.
நீங்கள் இங்கு வந்திருப்பது பழைய பொருளாதார கோட்பாடுகளை நினைவில் வைத்துக்கொள்ள அல்ல, மாறாக அவற்றுக்கு சவால் விடுவதற்காக. நீங்கள் இங்கு இருப்பது மேலிருந்து கீழாக பலன்கள் வழியும் மாதிரிகளை பின்பற்றுவதற்காக அல்ல.

நீங்கள் இங்கு வந்திருப்பது பன்முகப்படுத்தல், ஜனநாயகமயமாக்கல் மூலம் கீழிருந்து மேலாக பலன்களை கொண்டு செல்வதற்காக. நமக்கு தேவையானது வெறும் இலாபத்தை பின்தொடராமல் அதன் ஊடாக நீதியை உருவாக்கும் இளைஞர் தலைமையிலான வணிகம்.

சமத்துவமின்மை ஒரு அடிச்சுவடு அல்ல மாறாக தோல்வியே என்பதையும், நிலையான தன்மை ஒரு விருப்பம் அல்லது தேர்ந்தெடுக்கக்கூடிய ஒரு விருப்பம் மட்டும் அல்ல என்பதையும் புரிந்துகொள்ளும் தொழில்முனைவோர் நமக்கு தேவை. ஏனென்றால் அதுவே இருப்பு.

சூரிய சக்தியால் இயங்கும் வடக்கு மாகாணத்தின் நுண் தொழில்கள், கிழக்கு மாகாணத்தில் பெண் தலைமையால் இயங்கும் விவசாய-தொழில்நுட்ப மையங்கள், உலக சமூகத்திற்கு ஏற்றுமதி செய்யும் புதிய ஆடைத் தொழில்கள், தொழில்நுட்ப அடிப்படையிலான நிதியுதவியால் வலுவூட்டப்பட்ட தீர்வுகள் மூலம் இதுவரை போதிய கவனம் பெறாத கிராமப்புற-நகர்ப்புற சமூகங்கள், ரோபோ தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் உயர் தொழில்நுட்ப கருவிகளால் செய்யப்படும் பொருளாதார பயண பாதை கட்டுப்பாட்டுடன் கூடிய சூழல் பற்றி ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்.

இவை வெறும் கனவுகள் அல்ல, நமது புதிய தேசிய உத்தியாக மாற வேண்டும்.

2028 ஆம் ஆண்டில் உண்மையில் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் சூழலை ஆராய்ந்து பார்ப்போம். அதை இரு முனைகளின் ஆண்டாக கருதுகிறேன்.

அதாவது, ஒருபுறம் கடன் சேவைக்கு மீண்டும் மாறுவது, மறுபுறம் உலகின் மிகப்பெரிய நுகர்வோர் பகுதிகளில் ஒன்றான ஐரோப்பிய சந்தைக்கான நுழைவு வழியான GSP+ சலுகை வர்த்தக முறையை நிலையாக பராமரிக்க வேண்டியிருக்கும். இங்கு இந்த GSP+ சலுகையை தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். அது இலவச சான்றிதழ் அல்ல, நாம் சம்பாதிக்க வேண்டியது.

அது வாக்குறுதிகளால் அல்ல, நல்லாட்சி பற்றிய சாட்சி, தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் ஜனநாயகத்தை வலுப்படுத்துதல் போன்ற செயல்திறன் மூலம் சம்பாதித்துப் பெற வேண்டியது.
நமது இளம் வணிக தலைவர்களான நீங்கள் அந்த மாற்றத்தின் திறவுகோல்.

நீங்கள் ஆரம்பத்திலிருந்தே அதற்கு ESD அதாவது சுற்றுச்சூழல், சமூக, ஆளுமை கொள்கைகள் மூலம் தேவையான தலைமையை வழங்க முடியும், அதில் லாபம் மற்றும் கொள்கை ஆகிய காரணிகள் ஒன்றுக்கொன்று முரண்படாது என்பதையும் நீங்கள் காட்ட முடியும்.
நீங்கள் உலக மரியாதைக்குரிய தெளிவான மற்றும் பொறுப்புடன் பிணைக்கப்பட்ட மதிப்பு சங்கிலிகளை உருவாக்க முடியும்.

வெறும் உதவியாக அல்ல, மாறாக பொறுப்பான வளர்ச்சிக்காக பெற வேண்டிய பலனாக GSP+ சலுகையை பெற முடியும்.

நமது நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் நீண்டுகொண்டிருக்கும் அபாயகரமான நிலைமைகள் பற்றியும் தெளிவான பார்வையுடன் நாம் செயல்பட வேண்டும்.
கடந்த சில மாதங்களாக இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே வளர்ந்து வரும் முரண்பாடுகள் மூலம் உலக பாதுகாப்பின் மீது இருண்ட நிழல் படர்த்தப்பட்டுள்ளது.

இது பரந்த பிராந்திய மோதலாக உருவெடுத்தால், அதன் தாக்கங்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு மட்டும் மட்டுப்படாது.

இன்று நடக்கும் நிகழ்வுகள் மற்றும் வளர்ச்சிகள் உலக சமூகத்தின் உறுப்பினர்களாக வாழும்போது நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால்களையும் தடைகளையும் மேலும் எடுத்துக்காட்டும் நிகழ்வுகளாகும்.
எரிபொருள் விலைகள் அதிகரிக்கலாம். உலக வர்த்தகம் வீழ்ச்சிகளை எதிர்கொள்ளலாம். முதலீட்டாளர்களின் நம்பிக்கை குறையலாம்.

சுருக்கமாக சொன்னால், ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள போர் ஏற்கனவே பலவீனமாக இருக்கும் நம் நாட்டின் பொருளாதாரத்திற்கு அலைச்சல் அல்லது மீண்டும் மீண்டும் அதிர்வுகளை ஏற்படுத்தும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இலங்கைக்கு மோதல் நிறைந்த உலகில் வசதியான நிலையில் இருக்கும் சாத்தியம் இல்லை. எனவே பொருளாதார திறமை ஒரு ஆடம்பர பொருள் அல்ல. அது அத்தியாவசிய காரணியாகும்.

எனவே நமது இளைஞர்களின் தொழில்முனைவோர் திறன், புதுமையான மற்றும் உத்திசார் சிந்தனையும் இன்றே பயன்படுத்தப்பட வேண்டும். ஏனென்றால், நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், நமது விதி உலகளாவிய நிகழ்வுகளுடன் பிணைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நிலையற்ற சூழ்நிலைகளில், அந்த சூழ்நிலைகளுக்கு ஏற்ற தேசங்கள் உயிர் பிழைக்கின்றன, அழியாமல் இருக்கின்றன. நின்றுகொண்டு தயங்கும் தேசங்கள் பின்னோக்கி இழுக்கப்படுகின்றன.

இந்த புதிய யுகத்தில், சக்தி மூலம் அல்ல, அறிவு, வளர்ச்சி, தொழில்முனைவோர் திறன் மற்றும் நிலைத்தன்மை மூலம் சிறிய தேசங்கள் கூட தாக்கம் செலுத்தும் குழுக்களாக மாற முடியும்.

இந்தியப் பெருங்கடலின் மையத்தில் அமைந்துள்ள இலங்கை பாரிய போட்டிகள், வர்த்தக பாதைகள் மற்றும் காலநிலை அச்சுறுத்தல்களின் சந்திப்பில் அமைந்துள்ளது. ஆனால் நமது சக்தி வெறும் இணைப்புகளால் மட்டும் உருவாகும் ஒன்று அல்ல. அது நம்பகத்தன்மை மற்றும் நல்ல நற்பெயர் மூலம் உருவாக வேண்டும்.

நம்பகத்தன்மை நமது மக்களின் செயல்களிலிருந்து வருகிறது. நீங்கள் தொடங்கும் ஒவ்வொரு புதிய தொழிலும், நீங்கள் உருவாக்கும் ஒவ்வொரு புதுமையும், நீங்கள் உருவாக்கும் நியாயமான ஊதியத்துடன் கூடிய ஒவ்வொரு வேலையும் இராஜதந்திர நடவடிக்கைகள்.

நீங்கள் ஏற்றுமதி செய்யும் ஒவ்வொரு நெறிமுறை உற்பத்தியும் ஒரு நாடாக நாம் யார் என்பது பற்றிய செய்தியையும் எடுத்துச் செல்கிறது.
நீங்கள் வெறும் மாணவர்கள் மட்டும் அல்ல. நீங்கள் இலங்கையின் மென்சக்தியின் (soft power) தற்போதைய மற்றும் எதிர்கால தூதர்களும் ஆவீர்கள். அந்த பொறுப்பு உங்கள் பாதைக்கு தேவையான வழிகாட்டுதலை வழங்க அனுமதிக்கட்டும்.

இப்போது நான் உங்களை தனிப்பட்ட முறையில் அழைக்கிறேன். அரசாங்கம் அல்லது அரசியல்வாதிகள் அந்த சாத்தியக்கூறுகளை அடையாளம் கண்டுகொள்ளும் வரை தாமதிக்காதீர்கள், காத்திருக்காதீர்கள்.

அமைச்சுக்கள் டிஜிட்டல்மயமாக்கலையும், அதிகாரத்துவத்தினால் புதுமையையும் அறிமுகப்படுத்தி நமது அரசியல் தேவையான சூழலை வழங்கும் வரை காத்திருக்காதீர்கள், எதிர்பார்க்காதீர்கள்.

ஏனென்றால், சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்ப உங்களுக்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை.
இப்போதே, இந்த நோக்குக்காக உங்கள் தொழிலை கட்டியெழுப்பி உண்மையையும் வெளிப்படுத்தி உங்கள் குழுவையும் ஒன்றுசேர்க்கவும்.

அநீதியைக் கண்டால் அதைச் சொல்லுங்கள். ஊழலைக் கண்டால் அதை அம்பலப்படுத்துங்கள். எல்லைகள், வேலிகள் அனைத்தையும் தூள் தூளாக்கி அடித்து நொறுக்குங்கள். மாற்றத்தைக் கோருவதற்கு பதிலாக நீங்களே நீங்கள் கோரும் மாற்றமாக மாறுங்கள்.

இன்று நடத்தப்படும் இந்த மாநாடு வெறும் கற்றல் அமர்வு மட்டும் அல்ல. அது தேசத்திற்கு அளிக்கப்படும் ஒரு சிக்னல். டீம்ப்ரெனர் (Teampreneur), வணிக நகலெடுத்தல், trend pitch சமர்ப்பித்தல் ஆகியவை வெறும் பயிற்சிகள் அல்ல, தலைமைத்துவ நடவடிக்கைகளும் ஆகும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பும் உங்கள் குரலுக்கு நியாயமான எடையும் உள்ளது.

நிலவும் முறைமையில் மேலும் அமைதியாக இருக்கும்படி அழுத்தம் கொடுக்கப்பட்டாலும், உங்கள் தைரியத்தின் மூலம் மற்றவர்களை சரியான தருணத்தில் செயல்பட தூண்டலாம். அதற்கு நீங்கள் போதுமான அளவு முதிர்ச்சியடைந்துவிட்டீர்கள்.
இந்த நாட்டிற்கு தீங்கு விளைந்தது இளைஞர்களால் அல்ல, மாறாக பழைய, கடினமான, வேரூன்றிய முறைகளால்தான்.

புதிய சிந்தனையில் மட்டுமே இந்த முறையை உடைத்து முன்னோக்கி செல்லும் திறனை உருவாக்க முடியும். இலங்கையின் செல்வம் அதன் மண்ணின் அடியில் புதைந்துவிடவில்லை என்ற விடயத்தை நினைவுபடுத்தி எனது பேச்சை முடிக்கிறேன். இந்த செல்வம் பூமியின் மீது நடமாடுகிறது. நீங்களே அந்த செல்வம்.

இப்போது உங்கள் காலம்.
சவால்கள் தாங்க முடியாத அளவுக்கு கடுமையானவை என்று உங்களுக்குத் தோன்றுவதை நான் அறிவேன்.

ஆனால், காலனிய ஆட்சியிலிருந்து விடுதலை, சிவில் உரிமைகள் இயக்கத்தின் வெற்றிகள், பெர்லின் சுவர் இடிப்பு, கிளாஸ்னோஸ்ட் மற்றும் பெரெஸ்த்ரொய்கா, கோர்பச்சேவ் ஆட்சியின் திறந்த தன்மை மற்றும் மறுகட்டமைப்பு, இணையத்தின் கண்டுபிடிப்பு, செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்ப புரட்சி மற்றும் மாற்றம், ரோபோ தொழில்நுட்பம் உட்பட அது வரை எப்போதும் சாதிக்க முடியாது என்று தோன்றிய வரலாற்றில் நடந்த பெரும் மாற்றங்கள் அனைத்தையும் நினைவுபடுத்துங்கள்.

அவை அனைத்தும் ஆரம்பமானது உரிய கடமையை நிறைவேற்றியது அதுவரை அவ்வளவு முதிர்ச்சியடையவில்லை என்று குறிப்பிட்ட அறிமுகப்படுத்தப்பட்ட உங்களைப் போன்ற நபர்களிடமிருந்தாகும்.
எனவே புதிதாக சிந்திக்கத் தொடங்குமாறு இன்று உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். தைரியமாக முன்னேறுங்கள்.

பயமின்றி வேலைகளைத் தொடங்குங்கள். நெறிமுறையுடன் கட்டியெழுப்புங்கள். தைரியம் மற்றும் உறுதிப்பாட்டுடன் பேசுங்கள், செயல்படுங்கள். இந்த மாநாட்டை வெறும் நினைவுக்கு அப்பாற்பட்ட ஒரு திருப்புமுனையாக மாற்றுங்கள்.

ஜோன் எஃப். கென்னடி ஒருமுறை கூறியது போல், “சுதந்திரம், விடுதலையின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த எந்த விலையும் கொடுக்கவும், எந்த சுமையையும் தாங்கவும், எந்த கஷ்டத்தையும் எதிர்கொள்ளவும் செயல்படுவோம்.”
நாம் நேர்மை, நீதி, உள்ளடக்கிய வளர்ச்சி, பகிர்ந்து கொள்ளும் செழிப்பு மற்றும் செழிப்பான இலங்கைக்காக தேவையான அந்த விலையை கொடுக்க முன்வரும் தலைமுறையாக மாறுவோம்.

அது நமது உரிமையும் பாரம்பரியமும்.
நன்றி. உங்கள் எதிர்கால பயணம் நெறிமுறை நிறைந்ததாகவும், தைரியமானதாகவும், நிறுத்தப்படாததாகவும், நிறுத்த முடியாததாகவும் இருக்கட்டும்.
ஆயுபோவன், தெருவன் சரணை, வனக்கம், அஸ்ஸலாமு அலைக்கும், கடவுளின் ஆசி கிட்டட்டும்.
நன்றி.

Related posts

சிங்கப்பூர் அமைச்சர் கே.சண்முகம் இலங்கைக்கு

நயினாதீவு ரஜமஹா விகாரை புனித பூமியாக பிரகடணம்

அரசுடன் இணைவதானது உண்மைக்கு புறம்பானது – ரிஷாத்