உலகம்உள்நாடு

இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு தடை

(UTV | கொழும்பு) –  ஐக்கிய அரபு இராச்சியத்தைச் சேர்ந்த பிரஜைகள் இலங்கைக்கு பயணங்களை மேற்கொள்ள தற்காலிக அடிப்படையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்வதற்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 21ம் திகதி வரையில் இந்த தடை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் பெருந்தொற்று பரவுகையை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவ்வாறு பயணத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை உள்ளிட்ட 14 நாடுகளுக்கு இவ்வாறு தற்காலிக பயணத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

   

Related posts

கொழும்பில் 9 மணி நேர நீர்வெட்டு

ஏற்றுமதி வருமான சட்டம் : வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு தாக்கம் இல்லை

தேசிய சபையின் தாமதம் குறித்து சபாநாயகருக்கு ஜனாதிபதி கடிதம்