உள்நாடுவிசேட செய்திகள்

இலங்கையுடன் புதிய விமானத் தொடர்பை ஆரம்பிக்கும் சீனா – பெய்ஜிங்கிலிருந்து முதல் விமானம் கட்டுநாயக்க வந்தடைந்தது

இலங்கையுடன் புதிய விமானத் தொடர்பை ஆரம்பித்து வைக்கும் வகையில், சீனாவின் “கேபிடல் எயார்லைன்ஸ்” (Capital Air Lines) நிறுவனத்தின் முதலாவது கன்னி விமானம் (Inaugural Flight), பெய்ஜிங்கின் டாக்ஸிங் (Daxing) சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று (31) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இந்த கன்னிப் பயணத்திற்காக ஏ-330 எயார் பஸ் (A-330 Airbus) ரக விமானம் பயன்படுத்தப்பட்டதுடன், அவ்விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் நுழைந்த போது நீர்த்தாரை வரவேற்பு (Water Salute) அளிக்கப்பட்டு வரவேற்கப்பட்டது.

நேற்று (31) பிற்பகல் 01.46 மணியளவில் பெய்ஜிங்கிலிருந்து கேபிடல் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ஜே.டி.-487 (JD-487) எனும் விமானம் கட்டுநாயக்கவை வந்தடைந்தது. இதில் 170 பயணிகளும் 13 ஊழியர்களும் வருகை தந்திருந்தனர்.

இனிவரும் காலங்களில், இந்த விமான சேவையானது ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் பிற்பகல் 02.20 மணிக்கு கட்டுநாயக்கவை வந்தடைந்து, மீண்டும் அன்றைய தினமே பிற்பகல் 04.20 மணிக்கு பெய்ஜிங் நோக்கிப் புறப்படவுள்ளது. இந்தப் பயணத்திற்காக சுமார் 8 மணிநேரம் செலவாகும்.

இந்த விமானத்தை வரவேற்பதற்காக இலங்கையிலுள்ள சீன பிரதித் தூதுவர் ஷூ யான்வெய் (Zhu Yanwei), கட்டுநாயக்க விமான நிலைய மேலாண்மைத் தலைவர் அருண ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related posts

நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம் – 10 பேர் பலி

ஈஸ்டர் தாக்குதல் பிரதான சூத்திரதாரி யார்? 

இஸ்லாமிய மத நூல்கள் இறக்குமதிக்கு தடை எதுவுமில்லை – பிரதியமைச்சர் அருண ஜயசேகர

editor