உள்நாடு

இலங்கையில் டெல்டா பிளஸ் திரிபடையும் அபாயம்

(UTV | கொழும்பு) – வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புபவர்கள் மூலம் இலங்கையில் டெல்டா பிளஸ் திரிபடையும் அபாயம் காணப்படுவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்திருந்தார்.

இதேவேளை நாட்டில் டெல்டா பிளஸ் திரிபடையுமாயின் பொதுமக்களின் செயற்பாடு அதற்கு காரணியாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.

எனவே பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளை கடுமையாக பின்பற்றுவது அவசிம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் டெல்டா பிளஸ் திரிபு குறித்து நாட்டில் தொடர்ந்தும் பெற்றுக்கொள்ளப்படும் மாதிரிகள் ஊடாக பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்தார்.

Related posts

வரவு-செலவு திட்டத்தை எதிர்க்கிறது சுதந்திர கட்சி!

சதொச அத்தியாவசிய பொருட்கள் மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது

லொஹான் ரத்வத்தவுக்கு நல்ல அரசியல் எதிர்காலம் இருந்தது – முன்னாள் ஜனாதிபதி ரணில்

editor