வணிகம்

இலங்கையில் எதிர்வரும் மே மாதம் “பாட்டா” உச்சிமாநாடு

(UDHAYAM, COLOMBO) – 2017ம் ஆண்டிற்கான ஆசிய – பசுபிக் பயண சங்கத்தின் ‘பாட்டா’ என்று அழைக்கப்படும் சுற்றுலாத்துறை உச்சி மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளது.

இந்த உச்சி மாநாடு எதிர்வரும் மே மாதம் 18ம் திகதி முதல் 21ம் திகதி வரை நீர்கொழும்பில் நடைபெறும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

” எதிர்கால சுற்றுலாத்துறை எதிர்நோக்கும் இடர், தடை மற்றும் கண்டுபிடிப்பு ” என்பது இந்த வருட மாநாட்டின் தொனிப்பொருளாகும்.

இந்த மாநாட்டில், அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, சீனா, ஜப்பான் உட்பட 34 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

2024 ஆம் ஆண்டுக்கு நிகராக 94% ஆல் தொழிற்பாட்டு செயலாற்றுகை வளர்ச்சியை பதிவு செய்துள்ள கப்ருக நிறுவனம்

editor

பதிவு செய்யப்பட்ட உணவகங்களை மீண்டும் திறக்க அனுமதி

தேசிய சுற்றாடல் வாரம்