உள்நாடு

இலங்கையில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் ஆண் மக்கள்தொகை குறைவது எதிர்காலத்தில் பல நெருக்கடிகளை உருவாக்கக் கூடும் என்று வடமேற்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அமிந்த மெத்சில் தெரிவித்தார்.

1995 ஆம் ஆண்டில் 100 பெண்களுக்கு 100.2 ஆண்கள் இருந்த நிலையில், தற்போது அது 100 பெண்களுக்கு 93.7 ஆண்களாகக் குறைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பெண்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு, பெண்களின் பிறப்பு வீதம் உயர்வு, மற்றும் இளம் ஆண்களின் வெளிநாட்டு இடம்பெயர்வு ஆகியவை இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாக பேராசிரியர் அமிந்த மெத்சில் கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், “பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற ஒரு சில பட்டப்படிப்புகளைத் தவிர, ஏனைய அனைத்து துறைகளிலும் பெண்களின் சதவீதம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதை நாம் காண்கிறோம்.

மேலும், பணியிடங்களில் சேரும் பெண்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பது பாலின சமநிலையின்மையை ஏற்படுத்தி, பல சமூக மற்றும் பொருளாதார விளைவுகளை உருவாக்கலாம்.

இது தொழிலாளர் சந்தையையும், உற்பத்தித்திறனையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதை நாம் ஆராய வேண்டும். ஆண்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்ட சில தொழில்களில், போதுமான ஆண் மக்கள்தொகை இல்லாவிட்டால், நாம் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும்,” என்றார்.

இந்த விடயத்தில் அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பேராசிரியர் அமிந்த மெத்சில் வலியுறுத்தினார்.

Related posts

ஈடிஐ – சுவர்மஹல் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகள் மத்திய வங்கியால் நிறுத்தம்

உதவிய அனைவருக்கும் நன்றி – ரிஷாதின் திறந்த மடல்

கரையோர வாழ் மக்கள் அவதானம்