உள்நாடு

இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி இன்று விசேட அறிக்கை

(UTV | கொழும்பு) –   தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று(06) விசேட அறிக்கையொன்றை வழங்கவுள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெறுவது குறித்து ஜனாதிபதி விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.

அண்மையில் ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸிற்கான விஜயங்களை மேற்கொண்ட ஜனாதிபதி, இந்தியா, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் பிரதமர்களுடன் கலந்துரையாடினார்.

அரச தலைவர் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியையும் சந்தித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர் சபையின் வருடாந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்கியதுடன், பல உலகளாவிய பிரச்சினைகளுக்கு மத்தியில் ஆசியாவின் முன்னோக்கி செல்லும் பாதை பற்றிய உரையை நிகழ்த்தினார்.

Related posts

தற்போதைய நிலைமையில் வாகனங்களை இறக்குமதி செய்வது ஆபத்தானது – ஹர்ஷ டி சில்வா எம்.பி

editor

21 மாவட்டங்களில் நாளை தளர்த்தபடவுள்ள ஊரடங்கு

77 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி

editor