வணிகம்

இலங்கையின் ஏற்றுமதிகள் மேலும் அதிகரிக்கும் நிலை

(UDHAYAM, COLOMBO) – எதிர்காலத்தில் இலங்கையின் ஏற்றுமதிகள் மேலும் அதிகரிக்கும் நிலை இருப்பதாக, ஒக்ஸ்போர்ட் வர்த்தக குழுமம் எதிர்வு கூறியுள்ளது.

கடந்த மே மாதம் இலங்கைக்கான ஜு.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்திருந்தது.

இதன்படி 6000 இலங்கை உற்பத்திகளுக்கான வரிவிதிப்பு நீக்கப்பட்டு, ஏற்றுமதிக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

ஏற்கனவே இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர வர்த்தகம் 4பில்லியன் யூரோக்களாக பதிவாகி இருந்தது.

இதில் இலங்கையின் ஏற்றுமதி 2.6 பில்லியன் யூரோக்களாகும்.

இந்த ஏற்றுமதியானது மேலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தேங்காய் எண்ணெய் போத்தல் கட்டுப்பாட்டு விலைக்கு

கொவிட்-19 சவால்களுக்கு மத்தியில் உள்நாட்டு நுகர்வோர் தேவையை பூர்த்தி செய்யும் Pelwatte

தம்புள்ளை பொருளதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலை வீழ்ச்சி