உள்நாடு

இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்

(UTV|கொழும்பு)- வௌிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை நாளை மறுதினம் (31) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

இதற்கு ஜனாதிபதியின் அனுமதி கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதன் முதற்கட்டமாக துபாயில் தங்கியுள்ள இலங்கையர் சிலர் நாளை மறுதினம் அழைத்து வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, அவர்கள் நாடு திரும்பிய பின்னர் விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதுடன் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

Related posts

குணமடைந்தோர் எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

editor

வாகன உதிரி பாகங்களை இறக்குமதி செய்யும் போர்வையில் தங்க பிஸ்கட்டுகள் கடத்தல் – ஒருவர் கைது

editor